ராமாயணம் யார் ? எவர் ?

0

அகல்யை        – ராமரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றவள்
அகஸ்தியர்            –
மாமுனி, வனத்தில் வாழ்ந்தவர், ராமனுக்கு
                    
‘ஆதித்யஹிருதயம்’ உபதேசித்தவர்
அகம்பனன்            –
ஜனஸ்தானத்தில் ராமனின் அம்பினால்
                    
சாகாமல் தப்பிப் பிழைத்தவன், ராவணனிடம் ராமனைப்
                    
பற்றி கோள் சொன்னவன்
அங்கதன்        – வாலி
– தாரையின் மகன், கிஷ்கிந்தையின் இளவரசன்,
                    
சீதையைத் தேடத் தென்திசை சென்ற வானரப்படையின்
                    
தலைவன், ராமனின் துதனாக ராவணனின் அவைக்குச்
                    
சென்றவன்
அத்ரி            – முனிவர்,
அனசூயையின் கணவர், வனத்தில்
                    
வாழ்ந்தவர்
இந்திரஜித்       – ராவணனின்
மகன், லட்சுமணன் கையால் போரில்
                    
மாண்டான், மேகநாதன் என்றும் பெயர் உண்டு
கரன், துஷணன் – ராவணனின்
தம்பிகள், ஜனஸ்தானத்துக்கு இவர்கள்
                    
பொறுப்பாளர்கள், ராமன் கையால் மாண்டார்கள்
கபந்தன்         – தலையும்,
காலும் அற்றவன், ராமனால் வதைக்கபட்ட
                    
அரக்கன், கந்தர்வ வடிவத்தைத் திரும்பப் பெற்று
                    
ராமலட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல
                    
வழிகாட்டியவன்
குகன்            – வேடர்
தலைவன், படகோட்டி, சிருங்கிவேரபுரம் அவன்
                    
தலைநகரம்
கும்பகர்ணன்    – ராவணனின்
தம்பி, எப்போதும் பெரும் துக்கம்
                    
துங்குபவன்
கும்பன்          – கும்பகர்ணனின்
மகன்
குசத்வஜன்      – ஜனகனின்
தம்பி, மாண்டலி, சுருதகீர்த்தி ஆகியோரின்
                    
தந்தை, பரத சத்ருக்னனின் மாமனார்
கௌசல்யா,
கைகேயி,
சுமித்திரை       – தசரதனின்
மனைவியருள் தலையாயவர்கள்
கௌதமர்        – ரிஷி,
அகல்யையின் கணவர்
சதானந்தர்       – அகல்யை
– கௌதமரின் மகன், ஜனகரின் புரோகிதன்
சம்பராசுரன்     – இவனுக்கும்,
தேவர்களுக்கும் நடந்த போரில், தசரதன்
                    
தேவர்களுக்கு உதவினான்
சரபங்கன்        – தவ
முனி, வனத்தில் வாழ்ந்தவர்
சபரி             – மதங்கரின்
மாணவி, ஆன்மீகத்தில் பெருநிலை
                    
பெற்றவள், ராமனை தரிசித்தவள்
சதபலி           – வடக்குத்
திசையில் சீதையைத் தேடிச் சென்றவன்
சம்பாதி          – கழுகரசன்
ஜடாயுவின் அண்ணன், சீதையைக் காண
                    
அங்கதனின் படைக்கு உதவியவன்
சீதையின் வேறு
பெயர்கள்        – ஜானகி,
வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி
சுமந்திரன்       – தசரதனின்
மந்திரி, தேரோட்டி
சுக்ரீவன்        – வாலியின் தம்பி, கிஷ்கிந்தை மன்னன்,
                    
சூரியபகவானின் அருளால் பிறந்தவன்
சுதீக்ஷ்ணர்       – தவமுனி,
வனத்தில் வாழ்ந்தவர்
சுஷேணன்       – வானர
மருத்துவன், மேற்கு திசையில் சீதையைத்
                    
தேடச் சென்ற வானரப்படையின் தலைவன்
சூர்ப்பனகை     – ராவணனின்
தங்கை, விதவை
தசரதன்          – ராமனின்
தந்தை
ததிமுகன்        – சுக்ரீவனின்
தாய்மாமன், மதுவனத்தைக் காப்பவன்
தாடகை         – காமாஸ்ரமத்தை
அடுத்த காட்டில் வசித்த அரக்கி,
                    
ராமன் இவளை வதம் செய்தான்
தாரை            – வாலியின்
மனைவி, அங்கதனின் தாய், அறிவில்
                    
சிறந்த வானர ராணி
தான்யமாலினி  – ராவணனின்
இளைய மனைவி
திரிஜடா         – அரக்கிகளுள்
நல்லவள், சீதைக்கு நம்பிக்கை
                    
ஊட்டியவள்
திரிசரஸ்         – கரனின்
சேனாதிபதி
நளன்            – பொறியியல்
அறிந்த வானரவீரன், கடலின் மீது
                    
இலங்கைக்குப் பாலம் கட்டியவன்
நாரதர்           – முனிவர்,
பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர்
நிகும்பன்        – கும்பகர்ணனின்
மகன்
நீலன்            – வானர
சேனாதிபிபதி, அக்னி தேவனின் அருளால்
                    
பிறந்தவன்
பரசுராமன்       – விஷ்ணுவின்
அவதாரம், ஜமதக்னியின் மகன்
பரத்வாஜர்       – பிரயாகை
அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
பரதன்           – தசரதனின்
மகன், கைகேயியின் புத்திரன்
மந்தரை         – கூனி,
கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்தி
                    
வந்த தனி வேலைக்காரி
மதங்கர்         – தவமுனி,
வனத்தில் வாழ்ந்தவர்
மண்டோதரி     – மயனின்
மகள், ராவணனின் மனைவி, பட்டத்து ராணி,
                    
இந்திரஜித்தின் தாய்
மாரீசன், சுபாகு – தாடகையின்
மகன்கள், ராமனால் வதம் செய்யப்
                    
பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்
மால்யவான்     – ராவணனின்
தாய்வழிப்பட்டவன்
மாதலி           – இந்திரனின்
தேரோட்டி
யுதாஜித்         – கேகய
நாட்டு இளவரசன், கைகேயியின் தம்பி,
                    
பரதனின் தாய் மாமன்
ராவணன்        – விச்ரவாவின்
மகன், குபேரனின் தம்பி, புலஸ்தியனின்
                    
பேரன்
ராமன்           – ராமாயணத்தின்
கதாநாயகன், ராகவன், காகுத்தன்
ரிஷ்யசிருங்கர்  – புத்திரகாமேஷ்டியாகம்
செய்த முனிவர்
ருமை            – சுக்ரீவனின்
மனைவி, வாலி இவளைக் கவர்ந்து
                    
கொண்டான்
லட்சுமணன்     – ராமானுஜன்,
சுமித்திரையின் மகன், ராமனின் தம்பி
லங்கா தேவி    – இலங்கையின்
காவல் தெய்வம்
வசிஷ்டர்        – தசரதரின்
குலகுரு, அருந்ததியின் கணவர்,
                    (மார்க்கண்டேயர், மௌதகல்யர், வாமதேவர், காசியப்பர்,
                    
காத்தியாயனர், கௌதமர், ஜாபாலி ஆகியோர் மற்ற
                    
குருமார்கள்)
வருணன்        – கடல்
அரசன், தன் மீது அணைகட்ட ராமனை
                    
அனுமதித்தான்
வால்மீகி        – ராமாயணத்தை
எழுதிய ஆதிகவி, ரத்தினாகரன் என்ற
                    
வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்து தவம் புரிந்து
                    
மகரிஷி ஆனவர், குசலவனுக்கு ராமாயணம்
                    
போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்
வாலி            – இந்திரனின்
அருளால் பிறந்த வானர வேந்தன்
விஸ்வாமித்திரர் – பிரம்மரிஷி,
ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர்,
                    
சீதாராமன் திருமணத்துக்குக் காரணமானவர்
விராதன்         – தண்டகவனத்தில்
வாழ்ந்த ராக்ஷசன், முற்பிறவியில்
                    
ஒரு கந்தர்வன், ராமனால் சாபம் தீர்ந்தவன்
விபீஷணன்      – ராவணனின்
தம்பி, ராமனிடம் சரண் புகுந்தவன்
வினதன்         – கிழக்குத்திசையில்
சீதையைத் தேடிச் சென்றவன்
ஜடாயு           – கழுகரசன்
சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன்,
                    
சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர் நீத்தவன்
ஜனகர்           – சீதையின்
தந்தை, ஊர்மிளைக்கும் தந்தை
ஜாம்பவான்      – கரடி
வேந்தன், பிரம்மாவின் அருள் பெற்றுப்
                    
பிறந்தவன்
ஹனுமான்      – அஞ்சனை
என்ற தாய்க்கும், கேசரி என்ற தந்தைக்கும்,
                    
வாயு பகவான் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன்,
                    
மாருதி, வாயுகுமாரன் என்பவை அவன் வேறு
                    
பெயர்கள்
ஸ்வயம் பிரபை – குகையில்
வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப்
                   
படையினருக்கு உணவிட்டவள்

   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here