திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில், நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராம நாமத்தால் திருமலை எதிரொலித்தது.திருமலையில் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை துவங்கி நடத்தி வருகிறது. 68 சர்க்கங்களை கொண்ட சுந்திரகாண்டத்தில் தற்போது, 14 சர்க்கங்களின் பாராயணம் நடந்து முடிந்துள்ளது.
இவை தேவஸ்தான தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 150 முதல் 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன், அதை தேவஸ்தானம் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.இதுவரை, 3 அகண்ட பாராயணங்கள் திருமலையில் முடிந்துள்ள நிலையில் நேற்று காலை 12 சர்க்கம் முதல் 14ம் சர்க்கம் வரையிலுள்ள 146 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. 200 வேதபண்டிதர்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட பாராயணம் செய்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த அகண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராமநாமம் பாராயணம் செய்யப்பட்டது. இந்த ராமநாம பாராயணத்தில் பக்தர்களும் கலந்து கொண்டனர்.இதனால், திருமலை முழுவதும் ஸ்ரீராம நாமம் எதிரொலித்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதுபோன்ற அகண்ட பாராயணத்தால் உலக மக்கள் சுபிக் ஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பர் அதனால், தேவஸ்தானம் இதுபோன்ற பாராயணங்களை திருமலையில் நடத்தி வருகிறது.
Discussion about this post