சூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படும்.
ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றும். இது ‘வளைய சூரிய கிரகணம்’ என அழைக்கப்படுகிறது. இது காலை 10:22 முதல் பகல் 1:32 மணி வரை நீடிக்கிறது. மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும். அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.
பரிகாரம் யாருக்கு
* உடல்நலம் இல்லாதவர்கள் காலை, 6:00 மணிக்கு முன்பும், மற்றவர்கள் பகல், 2:00 மணிக்கு பின்பும் சாப்பிடவும்.
*ஞாயிறு பிறந்தவர்கள், ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில்சூரிய திசை, புத்தி உள்ளவர்கள் பகல்,2:00 மணிக்கு பிறகு, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.
*குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை வைத்து, கோவில் திறந்தபின் செலுத்தவும்.
* இஷ்டதெய்வங்களின் மந்திரங்களை ஜபிக்கலாம்.(உ.ம்: ஸ்ரீராமஜெயம், ஓம் நமசிவாய)
* கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்.
* சூரியனை பார்க்க வேண்டாம்.
*கர்ப்பிணிகள் வெளியே செல்ல வேண்டாம்.
Discussion about this post