காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, கோவில் நிர்வாகம் வரையறுத்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச், 18ம் தேதி முதல், ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்குப் பின் கோவில் திறக்கப்படும் போது, பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, கோவில் நிர்வாகம் வரையறுத்துள்ளது. சமூக விலகலுக்கான வட்டங்கள், மருத்துவப் பரிசோதனைகள், ‘ஆன்லைன்’ முன்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
Discussion about this post